Wednesday, February 18, 2009

தாயின் மரணம்

ரு பௌர்ணமி இரவு,
அமைதியாக உறங்கிக்கொண்டிருந்த ஒரு கிராமத்தில்
ஒரு வீட்டில் மட்டும் வெளிச்சம்.
ஒரு தாயின் கதறல்.

இதோ இன்னும் கொஞ்ச நேரம்,
பொறுத்துக்கொள் என்கிறாள் மருத்துவச்சி,
ஐந்து மகள்களை பெற்ற மகராசிக்கு
ஆறாவது பிரசவம்.

பிறந்தது ஒரு ஆண் மகன்.
என்ன பாவமோ தெரியவில்லை,
யார் செய்த சூழ்ச்சியோ புரியவில்லை,
சேய் நலம், தாய் மரணம்.

தந்தை வந்தான், பார்த்தான்
மனைவியின் மரணத்தை ஏற்பதா
இல்லை
மகனை வரவேற்பதா?

சீ இந்த மகன் எனக்கு வேண்டாம்,
இதை தந்தை சொன்னான்.
சனியன் பொறந்தவுடனே பெத்தவள முழிங்கிடுச்சு
இதை எவனோ சொன்னான்.

யாருக்கு தெரியும் தாய் இறந்தது
புற்றுநோயால் என்று.......

0 கருத்துக்கள்: