Monday, February 16, 2009

கடவுள் பூமிக்கு வந்தால்.....

வேலை முடிந்து நான் என்னுடைய மோட்டார்ல வீட்டுக்கு போய்கிட்டு இருந்த்தேன். ஒரு உருவம் என் முன்னாடி வந்து நின்னுச்சு.யாருன்னு உத்து பார்த்தா, அடடே அது நமது கணபதி. கணபதினா வேற யாரும் இல்ல, சிவன் பார்வதியோட மூத்த மகன். என்னடானு மோட்டர நிப்பாட்டினா பிள்ளையாரு மோட்டார் மேல ஏறிக்கிட்டாரு.

நான் : எங்க சாமி போவனும்.

கணபதி : எங்கயாசும் போ... அதுவும் சீக்கிரமா வெளிச்சமான இடத்துக்கு போ....

நான் : (மனதுக்குள்) சாமிக்கு என்ன அவசரமோ... மோட்டரு ஏறி பழக்கமோ என்னவோ... தெரியலையே...ஹெல்மட்டும் இல்லை.. போலிஸ் புடிச்ச சமான் கிடைக்குமே..என்ன ஆகுமோ..

கணபதி : அது ஒன்னும் ஆவாது... நீ முத போ... ரெம்பிட் சிகிட்லா ...

நான் : அட பிள்ளையாரு மலாய் பேசுறாரு... ஐயோ மனசுல நினைச்சாலும் சாமிக்கு தெரியுதே..இனிமே பேசாம இருக்கனும்.

மோட்டார் பயணமும், பேச்சும் தொடர்ந்தது.

நான் : ஆமா சாமி எங்க இந்த பக்கம்...? இப்பதான் எங்கள பத்தி ஞாபகம் வந்திச்சா?

கணபதி : இந்த கேள்விய நான் உங்க கிட்ட கேட்கனும். நீங்க எல்லாரும்தான் என்ன மறந்து போய்டிங்க.

நான் : என்ன சாமி சொல்லுரிங்க.... ஒவ்வொரு வாரமும் கோவிலுக்கு போறோம். சாமி கும்புடுறோம். அர்ச்சனை பன்னுறோம். வருசா வருசம் திருவிழா வேற... அப்புறம் எப்படி...?

கணபதி : என்னது ஒவ்வொரு வாரமும் கோயிலுக்கா? உங்க லட்சணம்தான் எனக்கு தெரியுமே... கோயிலுக்கு வர்றது.. ஏதாச்சும் பொண்ண பார்கிறது... அவ பின்னாடி போறது... வீட்டுல கேட்டா சாமி கும்பிட போனேன் என்கிறது...

நான் : இல்ல சாமி சரக்கு சூப்பரா இருந்திச்சா.. ஹென்போன் நம்பர் வாங்களாமுன்னுதான் போறோம், வேற எதுவும் இல்ல..

கணபதி : அது இல்லையா... கோயிலுக்கு வந்தாதான் எங்க நினப்பெல்லாம் உங்களுக்கு.. அங்க வந்தும் உங்களுக்கு வேற நினப்பு.. அப்புறம் சொல்லுறது சாமி கண்டுக்கவே இல்லனு... இது பொய்தான.. நியாயமா..நீயே சொல்லு...

நான் : நியாயம் இல்லதான்... மன்னிச்சிங்கொங்க...

கணபதி : தயவு செய்து கோயிலையாவது உங்க சொந்த சமாச்சாரத்த விட்டுட்டு கொஞ்சம் பக்தியோட இருங்க...

நான் : சரிங்க சாமி...

கணபதி : சரி நான் இறங்க வேண்டிய இட வந்திருச்சி... இறக்கிவிடு... சரியா...

நான் : சரி சாமி..என்ன ஆசிர்வதம் பண்ணுங்க சாமி..என்ன சாமி சீக்கிரம் ஆசிர்வாதம் பண்ணுங்க.. சாமி...சாமி எங்க போனாரு... எது எப்படியோ சாமிகிட்டே நல்லவே பேசியாச்சு.. சரி இப்ப எங்க இருக்கிறோம்...???? என்ன சத்தம் இது..அலாரம் சத்தம் மாதிரில கேக்குது....

நான் : அடடே கனவா... நல்லதா போச்சு...ஆனா பிள்ளையாரு சொன்னத யோசிக்கனும்... கோயிலுக்கு போனா ஒழுங்கா பக்தியோட சாமி கும்பிடனும். வேற எதுவும் செய்ய கூடாதுபா. சாமி நான் திருந்திட்டேன்...

கடவுள் மேலும் பூமிக்கு வருவார்.....

3 கருத்துக்கள்:

Anonymous said...

vanakkam...
thanggalin valai pativai mealum membadutthae enathu vaalhtthukkal.

Anonymous said...

நல்லாயிருக்கு நண்பரே. தொடருங்கள்.

அது என்ன உலக சினிமா.. ஏன் தமிழ் சினிமாக்கள் மட்டும் உலக அளவில் ஒரு போதும் போய் சேரவில்லை.

உலக சினிமாக்களில் என்னதான் உள்ளது. அவர்கள் மட்டும் உலக விருதுகளை வாரி குவிக்கிறார்கள். அந்த சினிமாக்கள் எவை..?

அது போன்ற சினிமாக்களை பற்றி அறியவும் பார்த்து ரசிக்கவும் அன்புடன் அழைக்கிறேன்.


உலக சினிமா பற்றிய எனது வலையை பார்க்கவும்


தங்களின் மேலான கருத்துக்களையும் கூறவும்.விருப்பபட்டால் என்னை ஊக்குவிக்க பின் தொடரவும்.

Anonymous said...

vanakam sharma,
vr nice yaar...
kanavil oru unmaiyaana sinthanai........
"ulagam aayiram solladdum unaku neethan neethibathi"....