Friday, February 13, 2009

உடைந்த நிலாக்களிலிருந்து

"பெண் என்னும்
பிஞ்சு பிராவகமே!
கனவாக நீயிருந்தால்
கண்விழித்தா நான் இருப்பேன்?
நிலமாக நீயிருந்தால்
நடக்க மாட்டேன். தவழ்ந்திருப்பேன்
முள்ளாக நீயிருந்தால்
குத்திக் கொண்டு குதூகலிப்பேன்
தீயாக நீயிருந்தால்
தினந்தோறும் தீக்குளிப்பேன்
தூசாக நீயிருந்தால்
கண் திறந்து காத்திருப்பேன்
மழையாக நீயிருந்தால்
கரையும் வரை நனைந்து நிற்பேன்"


நன்றி பா.விஜய்
"உடைந்த நிலாக்கள்"

0 கருத்துக்கள்: