Monday, February 16, 2009

தமிழ்ப்பள்ளிகளை காப்போம்

ம் நாட்டில் உள்ள மொத்த இந்தியர்களின் எண்ணிக்கை ஏறத்தால 8% மட்டுமே. அதில் பெரும்பாலோர் தமிழறிந்தவர்கள். ஆனால் பெயரளவில் மட்டுமே இவர்களில் பெரும்பாலோர் தற்போது தமிழறிந்தவர்களாக் உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் 50% மேற்பட்ட இளைஞர்கள் தாய்மொழியாம் தமிழை பேச மட்டுமே அறிந்துள்ளனர். மீதமுள்ளோர்களில் தமிழார்வம் உள்ளவர்களோ மிகவும் சிலரே.

இந்த சூழலுக்கிடையே, பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு கல்வி பயில அனுப்ப வேண்டும். தமிழை கற்று ஒன்றும் ஆவதற்கில்லை என்ற எண்ணங்களை விடுத்து விட்டு, தமிழுக்காகவும், தமிழ்ப்பள்ளிகளுக்காகவும் தங்களுடைய நேரம், பணம் போன்றவற்றை செலவளித்தால் நாட்டில் தமிழர் இனம் (இந்தியர்கள்) மேலும் முன்னேற்றம் கொண்டு சாதனையாளர்கள் நிறைந்த சமூதாயமாக திகழும்.
தமிழ்ப்பள்ளிகளுக்கு நம் பிள்ளைகளை படிக்க அனுப்புவோம் என்று நமக்கு நாமே உறுதி செய்துக்கொண்டு பாடுபடுவோம்.

1 கருத்துக்கள்:

Anonymous said...

Tamil palligal enbathu namm arivukku teeni poattae aranggam...
athai kaappathu namm kadamai,
tamil palliyil paditthu vitthu,,,
tamil pallighalai maranthu viduvathu namathu kallacchaaram aaghi vittathu.
anthae kalaacchaaratthai maatruvathu namm poruppu.