* போதி மரத்திற்கு புறப்பட்ட வழியில்,
உன்னை பார்த்ததும் திரும்பிவிட்டேன்!
* உன் மரத்திலிருந்து,
ஒரு இலை விழாதா என்று
நீரில் தத்தளிக்கும்,
எறும்பு நான்!
* உன்னை பார்த்து பேச வந்து,
உன் கண்ணை பார்த்து பேசி,
உளறுகிறேன்!
* கடவுளுடன் காபி சாப்பிட்டு
கொண்டிருந்தேன்…
நீ வந்தவுடன்
“சரிப்பா கிளம்புகிறேன்”
என்றார்!
* அவனவனுக்கான சித்திரவதைக்கு எதிரில்,
ஆண்டவன்
காதல் என்று எழுதி,
வைத்திருக்கிறான்!
* உன்னை நினைக்கும் போதெல்லாம்,
கோயில் பிரகாரத்தில் கசியும்,
ஒரு வாசனை நினைவுக்கு வருகிறது!
Monday, April 6, 2009
நா. முத்துகுமாரின் காதல் துளிகள்...
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துக்கள்:
Post a Comment