Monday, April 6, 2009

நினைவில் நின்றது...

* உன் கூந்தலை கலைத்தது,
தென்றல்.
கலங்கியது,
என் கண்கள்.

* இருவரும் கைகளை இறுகப்பற்றி நடந்தோம்,
கூட்டத்தில் தொலைந்து விடாமல் இருக்க,
நீயும்.
உன்னில் தொலைந்து போனதால்,
நானும்.

* மயக்கத்தின் மறுபக்கம்,
மரணத்தின் ஒத்திகை,
உறக்கம்!

* இன்று முதல் நானும்,
ஒரு கொலைகாரன்…!
கொன்றுவிட்டேன் என்
கோபத்தை…!

0 கருத்துக்கள்: