* உன் கூந்தலை கலைத்தது,
தென்றல்.
கலங்கியது,
என் கண்கள்.
* இருவரும் கைகளை இறுகப்பற்றி நடந்தோம்,
கூட்டத்தில் தொலைந்து விடாமல் இருக்க,
நீயும்.
உன்னில் தொலைந்து போனதால்,
நானும்.
* மயக்கத்தின் மறுபக்கம்,
மரணத்தின் ஒத்திகை,
உறக்கம்!
* இன்று முதல் நானும்,
ஒரு கொலைகாரன்…!
கொன்றுவிட்டேன் என்
கோபத்தை…!
Monday, April 6, 2009
நினைவில் நின்றது...
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துக்கள்:
Post a Comment