Tuesday, May 26, 2009

சிந்திக்க சில வரிகள்

சவப்பெட்டி அழுகிறது,
இறந்தது மனிதன் தானே...,
என்னை ஏன் புதைக்கிறீர்கள் என்று...?


சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்புதான்,
கருப்பு மனிதனுக்கும் இரத்தம் சிவப்புதான்....,
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை,
மனிதா,,,,,,
எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை....!

கண்களில் இடம் பிடித்த அனைத்தும்,
இதயத்தில் இடம் பிடிப்பது இல்லை.....!
இதயத்தில் இடம் பிடிக்கும் அனைத்தும்,
கண்களில் தென்படுவதில்லை....!


"கருவரையை" விட்டு கீழே இறங்கி....
"கல்லறைக்கு" செல்லும் தூரம்தான்...
"வாழ்க்கை"....


மற்றவர்கள் சென்ற பாதையில் நீங்களும் செல்லாதீர்கள்...
உங்களின் பாத சுவடுகள் தெரியாமல் போய்விடும்......


கடைசி வரைக்கும் கஷ்ட்ட படாமால் இருக்க "ஒரு வழி....",
"இன்று முதல் கஷ்ட்டப்படு...."

இறைவன் படைத்த உலகில் மனிதன் வாழ்கிறான்....!
மனிதன் வடித்த சிலையில் இறைவன் வாழ்கிறான்....!!!!

0 கருத்துக்கள்: